sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

/

'பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

'பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'

'பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'


ADDED : டிச 21, 2024 08:32 AM

Google News

ADDED : டிச 21, 2024 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில் பஸ் கட்டணத்தை குறைந்த பட்சம் 2 லிருந்து 8 ரூபாய் வரை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். புயல் மற்றும் கனமழையில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்திருப்பது, அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை காலங்கள் வரவுள்ள நிலையில் பஸ் கட்டணம் உயர்ந்திருப்பது போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.

தமிழக முதல்வர் கிராமப்புறப் பெண்கள் பயனடையும் வகையில் இலவச பஸ் பயணத்தை 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் இலவச பஸ் பயணத்தை செயல்படுத்தாத என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு ஏழை மக்களை பாதிக்கும் வகையில் பஸ் கட்டண உயர்வை அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பஸ் கட்டண உயர்வை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us