/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.5.5 கோடியில் கட்டிய நீச்சல் குளம் திறப்பு விழா காணாமல் வீணாகுது
/
ரூ.5.5 கோடியில் கட்டிய நீச்சல் குளம் திறப்பு விழா காணாமல் வீணாகுது
ரூ.5.5 கோடியில் கட்டிய நீச்சல் குளம் திறப்பு விழா காணாமல் வீணாகுது
ரூ.5.5 கோடியில் கட்டிய நீச்சல் குளம் திறப்பு விழா காணாமல் வீணாகுது
ADDED : ஏப் 16, 2025 10:10 PM

புதுச்சேரி: அரசு சார்பில், ரூ.5.5 கோடி செலவில், சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம், திறப்பு விழா காணாமல் வீணாகி வருகிறது.
நீர் நிலைகளில் சிக்கிக் கொள்பவர்களை மீட்கவும், மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளப் பெருக்கில் இருந்து தப்பிக்க நீச்சல் பயிற்சி அவசியம். ஆனால், மாநில தலைநகரான புதுச்சேரியில் அரசு சார்பில் நீச்சல் குளம் கிடையாது. தனியார் மூலம் மட்டுமே நீச்சல் பயிற்சி பெறும் நிலை உள்ளது.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நீச்சல் குளம் அமைக்க இடம் இல்லாததால், கடற்கரை சாலையில் ஜப்பான் நீரூற்று பின்புறம் உள்ள அரசு இடத்தை ஆசிரம நிர்வாகத்திற்கு ஒப்படைத்துவிட்டு, அதற்கு பதிலாக எல்லப்பிள்ளைச்சாவடி சாராதாம்பாள் நகரில் உள்ள ஆசிரம இடத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் நீச்சல் குளம் கட்டும் பணி கடந்த 2018 ம் ஆண்டு துவங்கியது.
சர்வதேச தரத்தில் 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 1.75 மீட்டர் ஆழத்துடன், 16 உடை மாற்றும் அறைகள் வசதியுடன் நீச்சல் குளம் கட்டுமானம் நடந்தது. நிர்வாக குழப்பங்கள் காரணமாக கட்டுமான நிறுவனம் விலகியது.
அதன்பிறகு கூடுதலாக ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்து புதுச்சேரியைச் சேர்ந்த வேறு ஒரு கட்டுமான நிறுவனம் மூலம் நீச்சல் குளம் கடந்தாண்டு கட்டி முடித்து, பூட்டி கிடக்கிறது.
இந்த நீச்சல் குளத்தை விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அதற்கு முன்பாக உரிய பயிற்சி பெற்று பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும், ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வகையில் நீச்சல் குளத்தை அரசே ஏற்று நிர்வகித்திட வேண்டும்.