/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் நாளை மகா கும்பாபிேஷகம்
/
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் நாளை மகா கும்பாபிேஷகம்
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் நாளை மகா கும்பாபிேஷகம்
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் நாளை மகா கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 15, 2025 07:33 AM

புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தி மற்றும் 18 சித்த பீடத்திற்கு நாளை மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் 9 அடி உயர தட்சணாமூர்த்தி சுவாமி, 6 அடி உயரமுள்ள 18 சித்தர்கள், 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடத்திற்கு நாளை (16ம் தேதி) மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
கும்பாபிேஷக பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, ரிஷப பூஜை, அஸ்வ பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்துசங்கிரகணம், கும்ப அலங்காரம், பிரவேசபலி, அங்குரார்ப்புனம், முதற்கால யாக பூஜை நடந்தது.
இன்று காலை 9:00 மணிக்கு அஷ்டலட்சுமி பூஜை, தன பூஜை, அஷ்டாதச கிரியை, புதிய சுவாமிகளுக்கு கண் திறப்பு, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, சோடச உபச்சார பூஜைகள், மகா தீபாராதனை மற்றும் மங்கல ஆரத்தி நடக்கிறது.
நாளை (16ம் தேதி) காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு தட்சணாமூர்த்தி, 10:18 மணிக்கு 18 சித்தர்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:30 மணிக்கு அனைத்து குருமார்களுக்கும் மகா தீபாராதனை நடக்கிறது.