ADDED : அக் 28, 2024 04:56 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : கோரிமேடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 23; என்பது தெரியவந்தது.
கார்த்திகேயனை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
