/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய சட்டசபை கோப்பு 5 மாதங்களாக கவர்னர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது சபாநாயகர் செல்வம் தகவல்
/
புதிய சட்டசபை கோப்பு 5 மாதங்களாக கவர்னர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது சபாநாயகர் செல்வம் தகவல்
புதிய சட்டசபை கோப்பு 5 மாதங்களாக கவர்னர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது சபாநாயகர் செல்வம் தகவல்
புதிய சட்டசபை கோப்பு 5 மாதங்களாக கவர்னர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது சபாநாயகர் செல்வம் தகவல்
ADDED : பிப் 16, 2024 06:57 AM
புதுச்சேரி: புதிய சட்டசபை கோப்பு 5 மாதங்களாக கவர்னர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது
என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் தற்போது இயங்கி வரும் சட்டசபை கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் முழுமையாக பராமரித்து அதன்பிறகு கூட்டத்தை நடத்தும் சூழல் உள்ளது.
அதோடு சட்டசபையின் நிலையை கருத்தில்கொண்டுதான் நான் தரை தளத்தில் இல்லாமல், புதிய கட்டடத்தின் 4வது மாடியில் சபாநாயகர் அலுவலகத்தை அமைத்துள்ளோம்.
புதிய சட்டசபைக்கு மத்திய அரசும், பிரதமரும் ஒப்புதல் அளித்துவிட்டனர்.
விளக்கம் தந்து, இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது கவர்னர் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 5 மாதமாக கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
கவர்னர் அளவீட்டில் சில விளக்கங்களை கேட்டுள்ளார். அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி வைக்கப்பட்டு 9 நிறுவனங்கள் பங்கேற்றனர். அதன் முழுமை அறிக்கை மத்திய அரசிடம் செல்லவில்லை.
எங்கள் பணியை முடித்து விட்டோம்.கவர்னர் ஒப்புதல்தான் பாக்கியுள்ளது. அதற்கான காரணத்தை கவர்னரிடம் தான் கேட்கவேண்டும்.
மத்திய அரசு தெரிவித்ததை நிறைவேற்றி உள்ளோம். அளவீடுகளில்தான் கவர்னருக்கு சந்தேகம் உள்ளதாக தெரிகிறது. எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வடிவமைத்தோம்.
அதிலும் சந்தேகம் கேட்டுள்ளார். இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. அவர்கள் சந்தேகத்தை கேட்கிறார்கள். நாங்கள் ஒன்றிணைந்துதான் பணியாற்றி வருகிறோம்.
கோப்பு எங்களிடம் வரவில்லை. பொதுப்பணித்துறைக்கும் கவர்னருக்கு தான் சென்று வருகிறது. அவருக்கான விளக்கத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக வழங்காததும் ஓர் காரணம்.
புதிய சட்டசபை கட்டாயம் கட்டப்படும். இந்த பழைய கட்டடம் அதிகபட்சமாக ஓராண்டுதான் தாக்குப்பிடிக்கும். முதல்வரிடமும் தெரிவித்துள்ளேன்.
இதனால் விரைவில் புதிய சட்டசபைக்கு பூமி பூஜை நடத்துவோம். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மாற்றியுள்ளோம்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.