ADDED : ஜன 05, 2024 06:23 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஊராட்சி தலைவராக இருப்பவர் ராஜேந்திரன் மனைவி சரசு. ஊராட்சியில் குடிநீருக்கு போர்வெல் போடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் போர்வெல் போடும் இடத்திற்கு குடிபோதையில் வந்த அப்பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன்கள் குணசேகரன், 35; ஞானசேகர், 32; ஆகியோர், ஊராட்சி தலைவர் சரசுவிடம், எங்களை கேட்காமல் எப்படி வேலை செய்யலாம் எனக்கேட்டு தகராறு செய்து தாக்கினர். தடுக்க வந்த அவரது கணவர் ராஜேந்திரனையும் தாக்கினர்.
ஊராட்சி தலைவர் சரசு கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து குணசேகர், ஞானசேகர் ஆகியோரை தேடிவருகின்றனர்.
