/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு
/
பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு
ADDED : நவ 13, 2024 05:41 AM
புதுச்சேரி : தட்டாஞ்சாவடியில் பைக்கில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரி, கோரிமேடு காமராஜர் நகர் விரிவு, இஸ்ரேல் நகரை சேர்ந்தவர் முப்புடாதி, 60. இவரது மனைவி வடிவு. 3 மகள்கள் உள்ளனர்.
இவர் கடந்த 28ம் தேதி தட்டாஞ்சாவடி, காமராஜர் சாலை வழியாக வீட்டிற்கு, தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த முப்புடாதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

