ADDED : மார் 05, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் உத்தரவின் பேரில், ஏட்டு ஹமீது உசேன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று மேம்பாலம் அருகே ஒருவர் ஆபாசமாக திட்டி பொது மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தில், கடலுார் மாவட்டம் இடங் கொண்டான்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு 42; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

