ADDED : பிப் 15, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பெண்ணை ஆபாசமாக பேசி, அவரது கணவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு அத்திப்படுகையை சேர்ந்தவர். அஞ்சான் மகன் கண்ணன்,42; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ்,44; கண்ணன் மனைவி ரேணுகாவை திட்டினார். இதை தட்டிக்கேட்ட கண்ணனை ராஜேஷ் கருங்கல்லால் தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த கண்ணன் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.