ADDED : ஜன 21, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 40, என்பவர், மதுபோதையில் புதுச்சேரி - மயிலம் சாலை, சேதாரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

