sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரவுடி கைது

/

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரவுடி கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரவுடி கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரவுடி கைது


ADDED : பிப் 06, 2024 06:15 AM

Google News

ADDED : பிப் 06, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : ஓசியில் மதுபானம் கேட்டு ஒயின் ஷாப்பில் கத்தியை காட்டி மிரட்டி, நாட்டு வெடிகுண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி , மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் நாகப்பன் மகன் மணிபாலன்,28: ரவுடி. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் திருபுவனை அடுத்த நல்லுாரில் உள்ள தனியார் ஒயின் ஷாப்பிற்கு சென்று, அங்கு பணியில் இருந்த விற்பனையாளர் ஆனந்த் ,37; என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மதுபானம் கேட்டார். ஆனந்த் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த மணிபாலன் சரக்கு கொடுக்காவிட்டால் நாட்டு வெடிகுண்டை கடையில் வீசிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் .திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார், மணிபாலனை கைது செயதனர். அவர் வைத்திருந்த கத்தி மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின்னர், மணிபாலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us