/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தை இறந்த துக்க காரியம் நடப்பதற்குள் மகன் சாவு
/
தந்தை இறந்த துக்க காரியம் நடப்பதற்குள் மகன் சாவு
ADDED : அக் 25, 2024 05:56 AM
புதுச்சேரி: தந்தை இறந்த துக்க காரியம் நடப்பதற்குள் மகன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி, 54; இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் இருந்த அவர், அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவரது தந்தை கடந்த 15ம் தேதி இறந்தார். இறந்த துக்க காரியம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்த, அருள்ஜோதி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த அவரை, அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.