ADDED : ஏப் 27, 2026 06:03 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதிய அமைச்சரவைக்காக புதுச்சேரி சட்டசபை வளாகத்தை அழகு படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மே.4ம் தேதி நடக்கிறது. அதனைதொடர்ந்து புதிய அமைச்சரவை மே. மாத இறுதிக்குள் பதவி ஏற்கும் என்று தெரிகிறது. அதனையொட்டி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்காக சட்டசபையை சீரமைத்து தயார் செய்யும் பணிகள் நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது. அதில், பழமை வாய்ந்த பாராம்பரியமான புதுச்சேரி சட்டசபை கட்டட வளாகத்தில் உள்ள மொசைக் தரைகளை பாலிஷ் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அலுவலகமும் நேற்று காலி செய்யப்பட்டது.
