ADDED : பிப் 19, 2024 04:45 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார்: சோரப்பட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இறந்தார்.
திருக்கனுார் அடுத்தசோரப்பட்டு தெற்கு வீதியைசேர்ந்தவர் அருண்குமார், 32; கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகவாணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கம் உடைய அருண்குமார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் திடீரென அருண்குமாருக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை உறவினர்கள் ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும்போலீசார் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.
