ADDED : அக் 05, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், மாளிகைமேடு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராம்கி, 25. இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு, மடுகரை மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அங்கிருந்த பெண்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மடுகரை போலீசார், அவரை கைது செய்தனர்.