ADDED : பிப் 26, 2024 11:44 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக பகுதியான நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கம்பர் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்ராஜ் 23, இவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு நெட்டப்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார்.
தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் வாலிபரை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இருப்பினும் திரும்பவும் அவர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
