/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செல்பி எடுத்த வாலிபர் அலையில் சிக்கி பலி
/
செல்பி எடுத்த வாலிபர் அலையில் சிக்கி பலி
ADDED : நவ 15, 2024 04:20 AM

காரைக்கால்: அரசலாறு முகத்துவாரத்தில் செல்பி எடுத்த வாலிபர் கடல் அலையில் சிக்கி இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் மகன் அப்துல் கபூர், 19. இவரது நண்பர்கள் நசீர், சாதிக் உட்பட 8 பேர் நேற்று காரைக்கால் கடற்கரைக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.
அவர்களில் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை கடலில் குளிக்க வேண்டாம் என, கடலோர போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பின், அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள், அரசலாறு முகத்துவாரத்தில் உள்ள கருங்கலில் செல்பி எடுத்தனர். அப்போது ராட்சத அலையில் அப்துல் கபூர் சிக்கி, கடலில் தவறி விழுந்தார்.
சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு துறை மற்றும் கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கடலில் விழுந்த அப்துல் கபூரை 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு, காரைக்கால் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுக்குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.