sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செல்பி எடுத்த வாலிபர் அலையில் சிக்கி பலி

/

செல்பி எடுத்த வாலிபர் அலையில் சிக்கி பலி

செல்பி எடுத்த வாலிபர் அலையில் சிக்கி பலி

செல்பி எடுத்த வாலிபர் அலையில் சிக்கி பலி


ADDED : நவ 15, 2024 04:20 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: அரசலாறு முகத்துவாரத்தில் செல்பி எடுத்த வாலிபர் கடல் அலையில் சிக்கி இறந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன் மகன் அப்துல் கபூர், 19. இவரது நண்பர்கள் நசீர், சாதிக் உட்பட 8 பேர் நேற்று காரைக்கால் கடற்கரைக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

அவர்களில் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை கடலில் குளிக்க வேண்டாம் என, கடலோர போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பின், அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள், அரசலாறு முகத்துவாரத்தில் உள்ள கருங்கலில் செல்பி எடுத்தனர். அப்போது ராட்சத அலையில் அப்துல் கபூர் சிக்கி, கடலில் தவறி விழுந்தார்.

சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்த தீயணைப்பு துறை மற்றும் கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கடலில் விழுந்த அப்துல் கபூரை 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு, காரைக்கால் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுக்குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us