/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : அக் 23, 2024 04:21 AM
புதுச்சேரி : ஆரியப்பாளையம் கஸ்துாரி நகரைச் சேர்ந்தவர் சிவபிரகாசம், 60; புதுச்சேரி ஆர்.டி.ஒ அலுவலகத்தில் புரோக்கராக வேலை செய்து வைத்தார்.
இவர், கடந்த 16ம் தேதி மதியம் 1:30 மணி அளவில் வேலை முடிந்து, தனது நண்பருக்கு சொந்தமான பைக்கில் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் வழியாக இந்திரா சதுக்கம் நோக்கி சென்ற போது ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கி பைக்குடன் கீழே விழுந்தார். இதில் பலத்தகாயமடைந்த சிவபிரகாசத்தை அருகில் இருந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

