ADDED : ஏப் 22, 2026 08:17 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வரும் 26ம் தேதி, வானொலியில் ஒலிப்பரப்ப படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மான் கீ பாத்- மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 26ம் தேதி, அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில், காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்ப படுகிறது. மீண்டும் அன்றிரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
