ADDED : மார் 12, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீஸ் ஏட்டு ஹமீது உசேன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் மேட்டு தெரு சந்திப்பு அருகே வாலிபர் ஒருவர் ஆபாசமாக திட்டி பொது மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், கடலுார் கூத்தபாக்கத்தை சேர்ந்த தேவா 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

