sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என் தொகுதியில் இனி பேனருக்கு இடமில்லை எம்.எல்.ஏ., வைத்தியநாதன் அதிரடி அறிவிப்பு

/

என் தொகுதியில் இனி பேனருக்கு இடமில்லை எம்.எல்.ஏ., வைத்தியநாதன் அதிரடி அறிவிப்பு

என் தொகுதியில் இனி பேனருக்கு இடமில்லை எம்.எல்.ஏ., வைத்தியநாதன் அதிரடி அறிவிப்பு

என் தொகுதியில் இனி பேனருக்கு இடமில்லை எம்.எல்.ஏ., வைத்தியநாதன் அதிரடி அறிவிப்பு


ADDED : பிப் 13, 2024 05:04 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இனி யாரும் எனக்கு லாஸ் பேட்டைத் தொகுதியில் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று எம்.எல்.ஏ., வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட கலெக்டருக்கு தலைமை நீதிபதிக் கடிதம் எழுதியதற்காக அவருக்கு காங்., கட்சி தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம உள்ளது என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் நன்கறிவர்.இருப்பினும் அவர்களின் ஆதரவாளர்களால் வைக்கப்படுகின்ற பேனர்களை கட் அவுட்களை மற்றும் அலங்கார வளைவுகளை வேண்டாம் என்று சொல்வதற்கு தயாராக இல்லை.

எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலைக்கு நடுவே வைக்கப்படுகின்ற மெகா சைஸ் பேனர் கலாசாரத்தால் புதுச்சேரியின் அழகு நாளுக்கு நாள் கெட்டு வருகிறது.

சிறு சிறு குடும்ப நிகழ்ச்சிகளுக்குக்கூட சாலையை அடைத்து மெகா சைசில் பேனர்கள் வைப்பதால் விபத்துக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

எனவே ,இனி லாஸ்பேட்டைத் தொகுதியில் என் ஆதரவாளர்கள் யாரும் பேனரோ, கட்அவுட்டோ மற்றும் வளைவுகளோ வைக்க வேண்டாம்.

குழந்தைகள், பெண்கள் வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லாஸ்பேட்டை தொகுதியில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் உடனே அப்புறப்படுத்தப்படும்.

மக்களை அச்சுறுத்தும் பேனர் மற்றும் கட்அவுட் இல்லாத மக்களைப் பாதுகாக்கும் முன் மாதிரியாக லாஸ்பேட்டைத் தொகுதி இருக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us