ADDED : ஏப் 13, 2026 04:10 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி நகர், சிறுதொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில், திருமுறைப்பதிகங்கள் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது.
காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த போட்டியினை தில்லையம்பலம் அறக்கட்டளை நிறுவனர் வடிவேல் துவக்கி வைத்தார். இதில், திரளான மாண வர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியின் நடுவர்களாக ஆதீன புலவர் மாதவன், புனிதர் பேரவை தலைவர் முனிசாமி ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வில்லியனுார், திருவாசகக்குழு நெறியாளர் கோமதி அம் மையார் மற்றும் சபை உறுப் பினர்கள் செய்திருந்தனர்.
