ADDED : ஜன 19, 2026 04:51 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் தன்னார்வலர் கூட்டமைப்பு சார்பில் நடந்த திருவள்ளுவர் தினவிழாவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வில்லியனுார், தன்னார்வலர் கூட்டமைப்பு சார்பில், கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத் தினர். தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சிலம்பம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வறிஞர் வெங்கடேசன், முன்னாள் கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் மீனாட்சிசுந்தரம், கோர்க்காடு அரசு பள்ளி துணை முதல்வர் முரளி, ஆசிரியர் வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமரேந்திரன், தலைமை ஆசிரியர் பிரகலாதன், கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமசிவராஜன், காதர்மொய்தீன், லிங்கேஸ்வரன், சங்கர், சிலம்பம் பயிற்சி கூடம் குணாளன், பாண்டியன், சிவஞானம், இரிச்சப்பன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி மற்றும் ஆறுமுகம் செய்திருந்தனர்.

