sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

/

பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

பெட்ரோல் போட்டதை தட்டி கேட்டவருக்கு மிரட்டல்


ADDED : ஜூன் 17, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : பெட்ரோல் பங்கில், கன் எடுத்து, பெட்ரோல் போட்டதை கேட்ட கேஷியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை தேடிவருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை என்கிற மஞ்சினி, 38, இவர் தவளக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்கில், கேஷியராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், பைக்கில் வந்த இருவர், பங்கில் இருந்த பெட்ரோல் போடும் கன் எடுத்து, அவர்கள் வந்த பைக்கில் பெட்ரோல் போட்டனர். அங்கிருந்த கேஷியர் துரை, எங்களை கேட்க்காமல் எப்படி பெட்ரோல் போடலாம் என தட்டி கேட்டார்.

அதில், ஆத்திரமடைந்த, இரண்டு பேரும் சேர்ந்து, கேஷியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, அவர் கொடுத்து புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், தவளக்குப்பம் அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சரண், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நெல்வின் என்பது தெரியவந்தது. இவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us