ADDED : ஆக 16, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுப்பட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். சின்னகாலப்பட்டு பகுதியைச் சேர்ந்த தேவராஜ், 19, என்பவர், மது போதையில் சின்னகாலப்பட்டு வங்கி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்டார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு சந்திப்பில் மது போதையில் ரகளையில் ஈடுப்பட்ட திருக்கோவிலுார் ஜோசப், 30; வில்லியனுார் கோட்டைமேடு சந்திப்பு பகுதியில் மது போதையில் ரகளை செய்த கடலுார், சந்திக்குப்பம் மோகன்ராஜ், 40, ஆகியோர் மீது அந்ததந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
