ADDED : ஜன 14, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போகி பண்டிகையை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இன்று 14ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 31ம் தேதி சனிக்கிழமை வேலை செயல்படும். இதற்கான உத்தரவை கவர்னர் பரிந்துரைப்படி, அரசின் சார்பு செயலர் ஹிரன் பிறப்பித்துள்ளார்.இதன் மூலம் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 5 நாள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
