/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'
/
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'
சுற்றுலா பயணிகள் படையெடுப்பு இடையஞ்சாவடியில் 'டிராபிக் ஜாம்'
ADDED : நவ 03, 2024 06:36 AM

வானுார்:: தொடர் விடுமுறை காரணமாக சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் போக்குவரத்து பாதித்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நேற்று காலை முதல் மாலை 6:00 மணி வரை சுற்றுலா பயணிகள், ஏராளமான சுற்றுலா பயணியர் விசிட்டர் சென்டர் பார்க்கிங் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வந்ததால், இடையஞ்சாவடி - கோட்டக்கரை சாலையில் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
தகவலறிந்த ஆரோவில் போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.