ADDED : ஜூலை 10, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் சார்பில், டிராக்டரை சபாநாயகர் செல்வம் விவசாயிக்கு வழங்கினார்.
மணவெளி தொகுதி, தவளக்குப்பத்தை சேர்ந்த விவசாயிக்கு மானியத்துடன் கூடிய ரூ.7.80 லட்சம் மதிப்பில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ, அலுவலகத்தில் நடந்தது. சபாநாயகர் செல்வம், டிராக்டரை இயக்கி வைத்து, விவசாயிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., பிரமுகர் ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு கடன் வழங்கும் சங்க மேலாளர் குமராவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.