sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கார் மோதி தொழிலாளி பலி கிளியனுார் அருகே சோகம்

/

கார் மோதி தொழிலாளி பலி கிளியனுார் அருகே சோகம்

கார் மோதி தொழிலாளி பலி கிளியனுார் அருகே சோகம்

கார் மோதி தொழிலாளி பலி கிளியனுார் அருகே சோகம்


ADDED : மார் 31, 2025 04:29 AM

Google News

ADDED : மார் 31, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே கார் மோதிய விபத்தில், பைபாஸ் சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஒப்பந்த தொழிலாளி இறந்தார்.

புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், சென்டர் மீடியனில் செடிகள் நடப்பட்டு, மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த செடிகளுக்கு, தனியார் வாட்டர் நிறுவனம் ஒப்பந்தம் மூலம் டிராக்டரில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

நேற்று தனியார் வாட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் புளிச்சப்பள்ளம் பகுதியை சேர்ந்த தனக்கோடி டிராக்டர் ஓட்டிக்கொண்டும், கொந்தமூர் காலனியை சேர்ந்த தெய்வநாயகம், 54; பின்புறமாக அமர்ந்து செடிகளுக்கு ஊற்றியபடி சென்றார்.

காலை 11:00 மணிக்கு, தைலாபுரம் அருகே தனக்கோடி டிராக்டரை சென்டர் மீடியன் ஓரம் நிறுத்தி தெய்வநாயகம் கீழே இறங்கி தண்ணீர் ஊற்றினார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சுசூகி கார் சென்டர் மீடியனில் மோதி, தெய்வநாயகத்தின் மீது மோதியது.

இதில், தெய்வநாயகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் காரில் இருந்த ஏர் பலுான் விரிந்ததால் காரை ஓட்டிச்சென்ற புதுச்சேரி, கவுண்டம்பாளையம் ரபிக், 42; என்பவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us