/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிக்க சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி
/
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிக்க சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிக்க சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிக்க சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி
ADDED : நவ 19, 2025 08:19 AM

பாகூர்: பாகூரில், வெட்டிவேரில் இருந்து நிலைத்தன்மை பொருட்கள், உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சக நிதி உதவியின் கீழ், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின், சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ், வெட்டிவேரில் இருந்து நிலையான தயாரிப்புகளை உருவாக்குதல் என்ற தலைப்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 நாள் பயிற்சி முகாம், பாகூர் களஞ்சியம் அலுவலகத்தில் கடந்த 27ம் தேதி துவங்கியது.
இதில், வெட்டி வேர் பொருட்கள் பயிற்சியாளர் இயற்கை சுற்றுச்சூழல் தயாரிப்பு நிறுவனர் ஆனந்தன், ஸ்வர்ணியம் புதுச்சேரி மூத்த ஆலோசகர் கீதா, ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் மற்றும் குழுவினர், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 30 பேருக்கு, வெட்டி வேரில் இருந்து பாய், மாலை, யோகா மேட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை செய்வது குறித்து பயிற்சி அளித்தனர்.
முகாம் நிறைவு விழா கடந்த 15ம் தேதி நடந்தது. விழாவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் வரவேற்றார்.
மாசுக்கட்டுப்பாடு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் நோக்கவுரையாற்றினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., பயிற்சி முடித்த பெண்களுக்கு, சான்றிதழ் மற்றும் பயிற்சி கால உதவி தொகைக்கான காசோலையை வழங்கினார்.
திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட அலுவலர் நித்தியா நன்றி கூறினார்.
முன்னதாக, பயிற்சி காலத்தில் தயாரித்த வெட்டி வேர் பொருட்களை சுய உதவி குழுவினர் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

