/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை; கடலுார் வாலிபர் கைது
/
பொது இடத்தில் ரகளை; கடலுார் வாலிபர் கைது
ADDED : டிச 28, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்; பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
முள்ளோடை சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். கடலுார் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த வசந்தராஜா 35; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.