ADDED : அக் 18, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாணரபேட்டை, பெருமாள் ராஜா வீதியை சேர்ந்தவர் முகேஷ் குமார், 40; கார் டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி ரம்யா. இரண்டு மகன்கள் உள்ளனர். டிராவல்ஸ் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முகேஷ்குமார், கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற முகேஷ்குமார், நேற்று காலை 6:30 மணி அளவில் மரப்பாலம் அருகே பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, அவரது மனைவி ரம்யா அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.