/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருதய ஆண்டவர் பசிலிக்காவில் முப்பெரும் விழா
/
இருதய ஆண்டவர் பசிலிக்காவில் முப்பெரும் விழா
ADDED : டிச 23, 2025 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்காவில், கிறிஸ்து பிறப்பு விழா, புனித எத்தியன் கிளைச்சபை ஆண்டு விழா, 2025 யூபிலி ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, புதுச்சேரி கடலுார் உயர் மறைமாவட்ட ஆன்ம இயக்குனர் அருள்புஷ்பம் தலைமை தாங்கினார்.
விழாவையொட்டி, புனித எத்தியன் கிளைச்சபை பங்கு தந்தை பிச்சைமுத்து முன்னிலையில், சிறப்பு கூட்டு பிராத்தனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. விழாவில், கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், விழாவையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

