sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அறக்கட்டளை நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு

அறக்கட்டளை நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு

அறக்கட்டளை நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு


ADDED : மார் 29, 2025 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 04:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலகத் தமிழ் மாநாட்டினைப் புதுச்சேரி தமிழறிஞர்களை கொண்டு விரைவில் நடத்த வேண்டுமென, பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் பாரதி, கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை, பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமையில் செயலாளர் வள்ளி, துணைச் செயலாளர் லட்சுமி, தேவேந்திரநாத் தாகூர், ஐஸ்வரிய லட்சுமி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது, உலகத் தமிழ் மாநாட்டினை புதுச்சேரி தமிழ் அறிஞர்களைக் கொண்டு விரைவில் நடத்த வேண்டும். கணினி தகவல் தொழில் நுட்பம் படித்த இளைஞர்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்வதால், குடும்பத்தினரை பிரிந்து பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகையால், புதுச்சேரியிலேயே பணிபுரியும் வகையில் தொழில்நுட்ப பூங்கா ஏற்படுத்தித் தரவேண்டும். புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைக்க வேண்டும். பாரதிதாசன் பெயரில் அரசு விருதுகள் வழங்க வேண்டும். நீர்நிலைகளைக் பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us