sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

/

அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

அரசு ஆரம்ப பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்


ADDED : டிச 31, 2024 05:58 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: திருபுவனை அடுத்த நல்லுார் அரசு ஆரம்பப் பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம், 2025ம் ஆண்டுக்குள் 'காசநோய் இல்லா புதுச்சேரியை உருவாக்கிட 100 நாள் காச நோய் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த முகாம் நடந்தது. திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஐஸ்வர்யா, மதகடிப்பட்டு துணை சுகாதார நிலைய டாக்டர் ராம்பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் ஆகியவை காசநோயின் அறிகுளிகளாகும்.

நீரிழிவு நோயாளிகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், உடல் மெலிந்து உள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகள், காச நோய்க்கு சிகிச்சை எடுக்காதவர்கள், காசநோய் பாதிக்கப்பட்டவரோடு வசிப்பவர்கள் ஆகியோருக்கு காசநோய் பாதிப்பிற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனேவே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து இலவச பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.






      Dinamalar
      Follow us