sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

/

கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது


ADDED : மார் 21, 2024 12:34 AM

Google News

ADDED : மார் 21, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம் : நாகை அருகே கடல் மார்க்கமாக படகில் கடத்தி வரப்பட்ட, 1900 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆங்காங்கே போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சாலை வழியாக மதுபானம் கடத்தி வந்தவர்கள், கடல் வழியாக மதுபாட்டில்கள் கடத்துவதாக எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு, நாகூர் வெட்டாறு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற பைபர் படகை சோதனை செய்தனர். படகில், 5 சாக்கு மூட்டைகளில், 90 மி.லி. கொள்ளளவு உடைய 1900 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து படகில் மது பாட்டில்கள் கடத்திய வாஞ்சூரைச் சேர்ந்த அஜித்குமார்,27, கார்த்தி,26, ஆகியோரை கைது செய்தனர்.

மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர் படகு மற்றும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us