/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள்
/
ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : மார் 24, 2026 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட இரு எம்.எல்.ஏ.,க்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. அதில், திருபுவனை (தனி) தொகுதியில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான அங்காளன் தி.மு.க.விலும், ஊசுடு தொகுதியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருந்த சாய் சரவணன் குமார் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிடுகின்றார்.
ஒரே தொகுதியில் இரு எம்.எல்.ஏ.,க்கள் களம் காண்பதால், திருபுவனை (தனி) தொகுதியில் தேர்தல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

