/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
ADDED : பிப் 01, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் சாலையில் இரண்டு வாலிபர்கள் மது போதையில், நின்று கொண்டு கத்தியை காட்டி அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திக்குப்பம் மணிபாரதி, 19; மேட்டுப்பாளைம் சூர்யா, 23; என தெரிய வந்தது.
சூர்யா மீது கொலை மற்றும் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. இருவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மணிபாரதி, சூர்யாவை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.