/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற இரு வாலிபர்கள் கைது
ADDED : டிச 31, 2024 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற ௨ வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இ.சி.ஆர்., மகாத்மா நகர் சந்திப்பில், கஞ்சா விற்பதாக டி. நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அங்கு நின்ற 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை துரத்திப் பிடித்து விசாரித்தில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிக்காந்த ஜான்மேரி (எ) பரத், 21, ரோடியார் பேட் பகுதியை சேர்ந்த சக்திவேல், 20, எனவும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.