ADDED : டிச 16, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோர்ட் அருகே கீழே கிடந்த பணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கோர்ட் 2-வது நுழைவு வாயில் அருகே அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்ற ரூ.13 ஆயிரம் ரூபாய் நேற்று மாலை கீழே கேட்பாரற்று கிடந்தது.
அதை அந்த வழியாக சென்ற ஒருவர் கீழே கிடந்த பணத்தை எடுத்து, அங்கு பணியில் இருந்த உருளையன்பேட்டை போலீஸ் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின் றனர்.

