ADDED : ஜன 20, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுப்பையா சாலையில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஓதியஞ்சாலை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து, இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் 0413- 2228067 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.