ADDED : பிப் 12, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை, சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 5வது கிராசில் நேற்று முன்தினம் காலை 50 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெளிர் பச்சை சட்டை அணிந்திருந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தை 2252398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.