ADDED : செப் 04, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் அடுத்த ஆராய்ச்சிக்குப்பம் சாராயக் கடையில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சாராயக்கடை கணக்குப் பிள்ளை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.