/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிங்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை
/
ஆதிங்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை
ADDED : ஆக 27, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் தையல் கூலி வழங்கும் விழா நடந்தது.
தலைமையாசிரியை நான்சி ஏஞ்சலின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி,மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி வழங்கினார். தமிழாசிரியர் ரகுநாதன் தொகுப்புரையாற்றி நன்றி கூறினார். விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.