sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க உப்பளம் எம்.எல்.ஏ., கோரிக்கை

/

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க உப்பளம் எம்.எல்.ஏ., கோரிக்கை

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க உப்பளம் எம்.எல்.ஏ., கோரிக்கை

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க உப்பளம் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஏப் 03, 2025 03:40 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வு பெற இருப்பவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகை மிக குறைவாக இருப்பதால் ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் ஆணையைப் பின்பற்றி புதுச்சேரி அரசாங்கம் இதுவரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.

ஏற்கனவே ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மத்திய அரசு அறிவித்த -ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை போல் பலன் அளிக்கவில்லை என்றாலும் ஓரளவு நன்மை இருப்பதை கருதி- மத்திய அரசு அனுப்பிய அரசாணைக்கு ஒப்புதல் வழங்குவதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு ஓரளவு பலன் கிடைக்க நேரிடும்.

எனவே மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us