sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சிறப்பு தீவிர திருத்தப்பணி படிவங்களை 11ம் தேதிக்குள் ஒப்படைக்க வலியுறுத்தல்

/

 சிறப்பு தீவிர திருத்தப்பணி படிவங்களை 11ம் தேதிக்குள் ஒப்படைக்க வலியுறுத்தல்

 சிறப்பு தீவிர திருத்தப்பணி படிவங்களை 11ம் தேதிக்குள் ஒப்படைக்க வலியுறுத்தல்

 சிறப்பு தீவிர திருத்தப்பணி படிவங்களை 11ம் தேதிக்குள் ஒப்படைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 10, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி வாக்காளர்கள் வரும் 11ம் தேதிக்குள் சிறப்பு தீவிர திருத்தப் பணி படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு மாநில தேர்தல் அதிகாரி, கலெக்டர் குலோத்துங்கன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தனர்.

பின், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின் படி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாளை 11ம் தேதிக்குள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.

இதுவரை கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத வாக்காளர்கள் நாளைக்குள் தங்கள் ஓட்டுச் சாவடிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து புதுச்சேரியில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us