ADDED : ஜூலை 03, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 101.5 வெயில் டிகிரி பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று 101.5 டிகிரி வெயில் பதிவானது. அதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதற்கிடையே, இந்த ஆண்டு கோடைக் காலத்தில் புதுச்சேரியில் 26வது முறை வெப்பம் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
