நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் வள்ளலார் மணி மாடத்தில் வள்ளலார் அவதார பெருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, திருவருட்பிரகாச வள்ளலார் குறித்து ஜீவகாருண்யா விளக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு சன்மார்க்க நீதிக் கொடி ஏற்றம் நடந்தது.
தொடர்ந்து அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
பண்டசோழநல்லுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.