/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக வி.சி.,யினர் மீது வன்னியர் சங்கம் புகார்
/
தமிழக வி.சி.,யினர் மீது வன்னியர் சங்கம் புகார்
ADDED : நவ 06, 2024 07:03 AM
வில்லியனுார்: தமிழக வன்னியர் சங்க தலைவரை பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுத்த வி.சி., கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி வன்னியர் சங்கம் சார்பில் வில்லியனுார் போலீசில் புகார் அளித்தனர்.
புதுச்சேரி மாநில வன்னியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் மதியழகன், பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து வில்லியனுார் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.
புகர் மனுவில் கடந்த 4ம் தேதி புவனகிரியில் நடந்த வி.சி., கட்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழக வன்னிர் சங்க தலைவர் அருள்மொழி தலையை அறுப்போம் என பொதுவெளியில் பேசி கொலை மிரட்டல் விடுத்த வி.சி., நிர்வாகிகளை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்து இருந்தனர்.