/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
/
காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
ADDED : பிப் 16, 2026 06:55 AM

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் முகாமை துவக்கி வைத்தார். தொண்டமாநத்தம் வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார். காரைக்கால் பஜன்கோ தோட்டக்கலை துறை பேராசிரியர் சுந்தரம், நவீன தொழில்நுட்பத்தில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் ஷெர்லி, வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பேசினார்.
முகாமில் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தொண்டமாநத்தம் உழவர் உதவியக களப்பணியாளர்கள் லட்சுமணன், சுகுமார் மற்றும் மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் செய்திருந்தனர்.

